Tuesday 7th of May 2024 03:05:26 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரோனா!

கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரோனா!


கிளிநொச்சியில் 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“கிளிநொச்சி 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடை நடத்தும் வியாபாரி ஒருவருக்கு நேற்று காய்ச்சல் என்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

அத்துடன், அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் கிளிநொச்சியில் அண்மைய நாள்களில் நடமாடிய இடங்கள் மற்றும் தொடர்புகொண்டவர்களைக் கண்டறிவதில் சிக்கல் உண்டு. அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனால் அவரது கடைக்கு அண்மையாக உள்ள கடைகளை மூடி தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன் பாடசாலைகளை மூடுமாறும் கேட்டுள்ளோம்” என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE